Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

*ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மேக்கூர் பகுதியில் நமது சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பாவடியை சில சமூக விரோதிகள் அபகரிக்க முயற்சி செய்தனர். இதனால் ஈரோடு செங்குந்த மகாஜன சங்கத்தின் மாவட்டத் தலைவர் சேவா ரத்னா Dr.N.நந்தகோபால் B.Com., அவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் அரும்பணிச் செம்மல் சோழா M.ஆசைத்தம்பி அவர்கள் தலைமையில் கடந்த (15.07.24) திங்கள்கிழமை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தோம். பின்னர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் திரு.சு.முத்துச்சாமி அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தோம். நேற்று (19.07.24) மேக்கூர் பாவடியைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டு கேட் (கதவு) அமைக்கப்பட்டு பாவடியை மீட்டு மேக்கூர் சமுதாய சொந்தங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மேக்கூரில் புதிய கிளை தொடங்கப்பட்டு நமது சமுதாயக் குலக்கொடியை மாவட்டத் தலைவர் சேவா ரத்னா Dr.N.நந்தகோபால் B.Com., அவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் அரும்பணிச் செம்மல் சோழா M.ஆசைத்தம்பி அவர்கள் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர். இவ்விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.R.வைரம் அவர்கள், மாவட்ட பாவடி மீட்புக்குழு துணை அமைப்பாளர் திரு.ரமணிதரன் அவர்கள், ஊர் தலைவர்கள், மேக்கூர் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளைஞரணியினர், மகளிரணியினர் மற்றும் நம் சமுதாய மக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு செங்குந்தரின் ஒற்றுமையை வலுப்படுத்தினர்...* instagr.am/p/C9oeI5qx5qS/

13 views
0 faves
0 comments
Uploaded on July 20, 2024