Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

*ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மேக்கூர் பகுதியில் நமது சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பாவடியை அபகரித்து ஜாதி, மத மோதலை தூண்டும் வகையில் சமூக விரோதிகள் பாவடியை ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் ஈரோடு செங்குந்த மகாஜன சங்கத்தின் மாவட்டத் தலைவர் சேவா ரத்னா Dr.N.நந்தகோபால் B.Com., அவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் அரும்பணிச் செம்மல் சோழா M.ஆசைத்தம்பி அவர்கள் தலைமையில் இன்று (15.07.24) திங்கள்கிழமை காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தோம். இதில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். பிறகு பிற்பகலில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் திரு.சு.முத்துச்சாமி அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தோம். பிறகு அமைச்சர் அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியளித்தார். பெருந்துறை பேரூராட்சி தலைவர் திரு.ராஜேந்திரன் அவர்களையும் சந்தித்து பாவடியை சுற்றி மதில்சுவர் அமைத்து தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேக்கூர் காமாட்சியம்மன் கோவில் நிர்வாகிகள், ஈரோடு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பாவடி மீட்புக்குழு அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், மாவட்ட கிளைச் சங்க நிர்வாகிகள், கிளை உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், இளைஞரணியினர், மகளிரணியினர் மற்றும் நம் சமுதாய மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்...* instagr.am/p/C9eBlEvoYtA/

9 views
0 faves
0 comments
Uploaded on July 16, 2024