தேடிச் சோறுநிதந் தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை

நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்

முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்

மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி

என்னைப் புதியவுயி ராக்கி - எனக்

கேதுங் கவலையறச் செய்து - மதி

தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்

சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

Read more
  • JoinedJuly 2010
  • OccupationWedding photographer
  • HometownKadayampatti,Elampiilai,salem dt
  • Current citymettupalayam.coimbatore,cell: 98433 26955
  • CountryIndia
View all

Photos of Jeeva Subramaniam

Testimonials

Nothing to show.